உங்களிடம் ஒரு கேள்வி??

நண்பர்களே, உங்களிடம் ஒரு கேள்வி??

    பொங்கலை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்க காராணமென்ன??

    பொங்கல் விடுமுறை இவர்களுக்கெதுக்கு எப்படியும் மது அருந்ததானே போகிறார்களென்று சொல்ல காரணம் என்ன??

சற்று சிந்தியுங்கள்!!!

   1.தமிழர் திருநாளை புறந்தள்ளி, புத்தாடை உடுத்தி நம் பாட்டனை கொன்ற தினத்தை முதன்மைபடுத்தியது.

  2. பெருக்கெடுத்து ஓடிய ஆற்றிலிருந்து மணலனைத்தையும் வாரியெடுத்து, ஆடி பெருக்கு என்ற ஒன்றில்லாமல் அழித்துவிட்டு, நஞ்சு நிறைந்த வண்ணப்பொடியை அப்பி அதை கழுவ ஒருவாரத்தேவையான நீரை ஒரே நாளில் வீண் செய்தது.

  3. கொள்ளையிலே விளைந்த பழங்களை பறித்து அதில் கண்விழித்ததை விட்டு, வியாபாரத்தை மட்டுமே மையமாக கொண்ட தொலைகாட்சிகளின் முன்னமர்ந்தோம்.

  4. வீடெங்கும் தீபமேற்றி புன்னகையில்
வெளிச்சத்தை இரட்டிப்பாக்கியதைவிட்டு,

  நம்மை அடிமையாக்க முட்படுபவர்களின் வால் பிடித்து நடக்கும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

      இன்னும் விளங்கவில்லையா? ஒரு இத்தை அழிக்கவேண்டுமென்றால், அவர்கள் பண்பாட்டை அழிக்க வேண்டும். பின்பு அவ்வினம் தாமாக அழியும்.

     நம் பண்பாட்டின் மூலம் நம் இனம் காக்க வேண்டிய தருணம் இது. பெருமைக்காக கூறவில்லை நான் தீபாவளியை துறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆகவே தங்களாலும் முடியும் உறவுகளே!!

இது பற்றி உங்கள் கருத்து என்ன??
  

SHARE

Author

அரசியல் சிந்தனைகளுடன் சமூக விழிப்புணர்வு. மாற்றம் என்னுள்ளிருந்து

  • Facebook
  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Popular Posts