யானை க‌ட்டி போர‌டித்த‌ வீரவம்சம்

திரண்டு வருகிறது கண்ணீர்
மாடு க‌ட்டி போர் அடித்தால் மாளாது செந்நெல் என்று யானை க‌ட்டி போர‌டித்த‌ வீரவம்சம் வம்சம் நமது விவசாய வம்சம் , இன்று காடு வரண்டு , களனி வரண்டு ,கிணறு வரண்டு விளைவிக்க தண்ணீர் இல்லாமல் , விளைச்சல் .இன்றி வறண்ட பூமியை கண்டு கண்ணீர் விட்டு ! டெலில்லியில் வற்றிய வயிறுடன் நிற்க்கிறான் நம் விவசாயி , அதை கண்டால் திரண்டு வருகிறது கண்ணீர் !
அன்று.. கலப்பையை தோளில் ஏந்தி.. களம் நிறைய நெல்மணிகள் விளைவித்து
அரைவயிறு அவனுண்டு முழு வயிறு நாமுண்ண நமக்காக சேற்றில் நின்றான்
இன்று.. கலப்பைகள் கால்நீட்டியபடி.. களங்கள் கண்ணீர்விட்டபடி.. ஏர்பூட்டிட ஏற்றம் இறைத்திட ஏக்கமாய் நாங்கள்.. கால்வயிறை நிரப்பிக் கொள்ள வழிவிட்டு எம்மை வாழவிடு என்று திருவோட்டை கையில் ஏந்தி சுடும் வெயிலில் நீண்டு படுத்து டெல்லி பட்டணத்தில் தவித்துக்கொண்டு இருக்கிறான் !
தடுத்து நிறுத்தி உதவ வேண்டிய தமிழக அரசு ! சிறைகைதியின் புகழ்பாடி கொள்ளைக்காரணுக்கு வாக்கு கேட்டு திருவீதி உலா வருகிறது !
பொங்கி எழ வேண்டிய பொது மக்களாகிய நாமோ இளையராசா , எஸ்.பி.பி ராயல்டி பிரச்சணையில் மூழ்கி இருக்கின்றோம் ! ஏ தாழ்ந்த தமிழகமே , உனக்கு நன்றி இல்லையா ?
நடிகனுக்கு கட்டவுட் வைத்து பால் அபிசேகம் செய்யும் நாம் நமக்கு உணவளிக்கும் உழவனுக்கு கரம் கொடுத்திட மனவரவில்லையே !
ஊருக்குச் சோறிட்டவனை ஒருவேளைச் சோறுக்கு கையேந்தும் நிலை.
இனியாவது ஒருபோதும் வராது ஆக்க்கிட .? காசு கொடுத்து ஓட்டு வாங்கி கோட்டைக்கு போன அந்த கொள்ளைக்கூட்டத்தின் சட்டையை பிடித்து உனக்கு ஓட்டு போட்டதாலே விவசாயி கோவணமும் போய்விட்டது ! எங்களுக்கு மானமும் போய்விட்டது என்று வீதிக்கு வந்து குரல் கொடுப்போம் வாருங்கள் .! உழவனுக்கு ஆதரவாய் ஊர்கூடி நிற்போம் !
இல்லையெனில் நாளை நாமும் உணவுக்கு கையேந்தும் நிலை வந்திடும்
SHARE

Author

அரசியல் சிந்தனைகளுடன் சமூக விழிப்புணர்வு. மாற்றம் என்னுள்ளிருந்து

  • Facebook
  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Popular Posts